Friday, February 4, 2011

>> மனிதன்???...

எல்லா உயிரினமும் 
இனபெருக்கம் செய்யும்....
எல்லா ஜீவனும் 
குளிருக்கு நடுங்கும்... 
எல்லா பிராணிகளும் 
இரைதேடும்...
அட உன்பெயர் மட்டும் என்ன மனிதன்???...

>> கருவறை ...

நிறைமாதம் சுமந்து
பனிக்குடம் உடைந்து
தலைகுப்பற வெளியேறியது
என் தாயாகும் கனவு...
மருத்துவம் சொல்லிவிட்டது
மகப்பேறு இல்லை என்று... 
யாரும் இறக்கவில்லை, புதைக்கவில்லை...
இருந்தும் என் கருவறை என்பது...
ஒரு கல்லறை...

>> வரதச்சனை...

விலைவாசி விஷம்மாறி ஏறிப்போனாலும்...
அடி வயித்துல நெருப்பக்கட்டி....
அம்பது ரூபா வட்டிக்கு கடன் வாங்கி...
அஞ்சு கிலோ தக்காளியும்...
அம்பது கிலோ வெங்காயமும் 
வரதச்சனையா கொடுத்து....
கல்யாண செலவு முழுசா ஏத்துக்க
தயாரா இருந்தாலும்....
வீட்டுக்கு போய் முடிவு சொல்றோம்னு....
பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லப்போற....
அந்த காட்சி...
இப்பவே என் கண்ணுல ஓடுது ...

>> மொபைல் ...

சில் வண்டுகள் எல்லாம் sim card வாங்குது....
SMSல A ஜோக் அனுப்புது...
வீட்டு பாடத்த Mobileல படிக்குது....
இத பார்த்து கண்ணு கலங்கிதான் நிக்குதே!!!!...
என்றோ....
பழனியில முருகன தொலைச்ச அம்மாவும்....
திருப்பதில ஆண்டால தொலைச்ச அப்பாவும்..

>> எச்சரிக்கை வாசகம் ...

அரசு அலுவலகங்களில் 
அறிவிப்பு பலகை..... 
லஞ்சம் வாங்குவதும் குற்றம் 
குடுப்பதும் குற்றம்....
நினைவுக்கு வராமல் இல்லை...
குடி குடியை கெடுக்கும் என்று...
மதுபான கடைகளில் எழுதியிருந்த....
அந்த "எச்சரிக்கை வாசகம்"...

>> கோடீஸ்வரன் ...

குழந்தை எப்படி கருவாகி உருவாகும்
என்பது எல்லோருக்கும் தெரியும்...
அதை வெளியே பேசினால் அபத்தம்....
எங்கள் கரை வேட்டிக்காரர்கள் 
கோடீஸ்வரன் ஆன கதையைப்போல!!!!!..

>> மனித இனம்

தலை பெரியதாய்...
கழுத்து நீளமாய்...
மூக்கு சப்பையாய்...
காது அகலமாய்....
கண்கள் பெரியதாய்...
வாய் கோணலாய்...
கால்கள் குட்டையாய் 
இருந்தால் தான் 
மதிப்பும், மரியாதையும்....
இது...
பாலாய்போன இந்த 
மனித இனத்திற்கு பொருந்தாது!!!...