Thursday, August 26, 2010

>> அப்பா...

வாய கட்டி வயித்த கட்டி நீ கட்டுன வீட்டுல...
ஆயிரம் பேர் கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சில நாயகனா இருந்த...
உசிரில்லாம கிடந்த...
நீ பார்த்து பழக்கிவிட்ட சொந்தமெல்லாம்...
உன்ன பாருன்னு சொல்லிட்டு அழுதது 
எனக்கு ஒன்னும் புரியல நின்ன இடம் தெரியல... 
நீ உயிரோட இல்லைங்கறது கூட கவலை இல்ல...
இன்னும் கொஞ்ச நேரம் தான் எங்க கூட இருப்பனு 
நினச்சுதான் துடிச்சேன், அழுதேன்... 
என்னோட சாவையும் சேத்து அன்னைக்கே அனுபவிச்சேன்...

0 comments:

Post a Comment